Sunday, November 15, 2009

தமிழ் இணைய பயிலரங்கு

வளர்ந்துவரும் இன்றைய காலகட்டத்தில் இணையம் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. அடிப்படை வசதிகளில், ஒரு அலைபேசியும் அதில் இணைய இணைப்பும் வரும் காலங்களில் கட்டாயமானதாகிவிடும் என்பது மகிழ்ச்சியான செய்திதான்.
ஆனால் இன்னொரு புறம் பள்ளிகளிலும், கல்வி நிலையங்களிலும் இன்னமும் அவை வெறும் ஏடுகளில் மட்டுமே படிக்கும் வண்ணம் இருந்து வருகிறது. மேலும் அவர்கள் படிக்கும்போது ஒரு மென்பொருளும், படித்துமுடித்தபின் பயன்படுத்தும் மென்பொருள் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக இருந்துவருகின்றனது . ஆகையால் அவர்களும் அவர்களுக்கு சொல்லித்தரும் ஆசிரியர்களும் அடிக்கடி தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தவேண்டியது கட்டாயம்.
இந்த நிலை மாற எங்களது விஷூவல் மீடியா நிறுவனம் பள்ளிகள் மறறும் கல்வி நிலையங்களுக்குச் சென்று மேம்பட்ட கணினி தொழில்நுட்பங்களை இலவச கருத்தரங்குகள் , இணைய வழி ஆலோசனைகள் வழியே எடுத்துரைக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். இதன் வழியாக அனைவரும் புதிய தொழில்நுட்பங்களை வெகு எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.
எங்களின் இந்த முயற்சிக்கு உங்களது ஆதரவுகளை எதிர்பார்க்கிறோம்.

1 comment:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல முயற்சி நண்பரே..
காலத்தின் தேவை அறிந்த முயற்சி..
வாழ்த்துக்கள்.