Tuesday, January 26, 2010

பதில் சொல்வது யார்?

பதில் அளிப்பது யார்?


1957ம் ஆண்டு முதல் முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றிப்பெற்று சட்டமன்றத்திற்குள் முதல் வருகை பதித்த முதல்வர் கருணாநிதி சட்டசபையில் தனது பொன்விழாவை கொண்டாடும் சமயத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தினை கட்டிக்காப்பாற்றிவரும் திமுக தலைவருக்கு அடுத்தபடியாக திமுகவிற்க்கான தலைமையை கலைஞருக்கு அடுத்து யார் என்பது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தாலும் தினகரன் நாளிதழ் உலகப் புகழ்பெற்ற ஏ.சி.நீல்சன் நிறுவனத்துடன் இணைந்து மக்கள் மனசு என்ற பெயரில் கருத்துக்கணிப்பை வெளியிட்டு வருகிறது.

இக்கருத்துகணிப்பில் நேற்று(09/05/07) கலைஞரின் அரசியல் வாரிசாக யார் வரவேண்டும் என்ற கருத்துக்கணிப்பின் முடிவை வெளியிட்டுள்ளது.

இக்கருத்துகணிப்பில் தமிழ்நாடு முழுவதும் கலைஞரின் அரசியல் வாரிசாக ஸ்டாலின் வர விருப்பம் தெரிவித்து 70%மும, அழகிரிக்கு தென் தமிழகத்தில் தவிர மற்றவர்கள் யாரும் வாக்களிக்கவில்லை.


இதனால் ஆத்திரம் அடைந்த மு.க.அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் நடத்திய வெறியாட்டத்தில் மக்கள் பாதிப்படைந்ததோடு மட்டுமல்லாமல் தினகரன் அலுவலகத்தில் நடத்திய கோர வெறி தாக்குதலில் தினகரன் அலுவலக தொழில்நுட்ப ஊழியர்கள் இருவரும், பாதுகாப்பாளர் ஒருவரும் பலியாகிஉள்ளனர்.



* திமுக தலைவர் வீட்டில் நடைபெறும் குடுமிபுடி சண்டைக்கு அப்பாவி ஊழியர்கள் பலிவாங்கப்பட்டது சரிதானா ?



* தமிழகத்தில் வன்முறையே இல்லை என்று எதிர்கட்சிக்களுக்கு சூடு கொடுத்துவரும் தமிழக முதல்வரின் மகனும், அவர்களின் ஆதரவாளர்களும் நடத்திய வன்முறைக்கு இவர்களுக்கு சம்மந்தமே இல்லாத மூவர் பலியானது சரிதானா?



* கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்களுக்கு அமைதியான முறையில் தீர்வை காணாமல் அராஜகமான முறையில் தன் எதிர்ப்பை தெரிவித்த அழகிரி அதேபோன்ற கருத்துக்கணிப்பில் தன்னுடைய பெயரும் இடம்பெற இன்னும் பாடுபடுவதை விட்டுவிட்டு வன்முறையில் இறங்குவது சரிதானா?



* தன்னுடைய 25ம் வயது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு அடுத்த நாளே வன்முறையாளர்களின் கோரபசிக்கு பலியான கோபிநாத்தின் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்னால் மட்டும் போதுமா? அதே போல்

அந்த நிறுவனத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்களின் பாதுகாப்பு?



* குடும்ப பிரச்னைக்கு அரசியல் ஆக்கியுள்ள இவர்களுக்கு மீண்டும் அரசியல் நடத்த தகுதியுள்ளவர்களா?



* இப்படி பத்திரிக்கை கருத்துக்கணிப்பில் வெளியிட்டதற்காக மூன்று நபர்கள் பலி என்றால் பிற்காலங்களில் கருத்துக்கணிப்பே வெளியிடாத நிலை ஏற்படுமா?



* திமுக வின் ஆட்சியில் திமுகவினராலேயே திமுக தலைவர் கருணாநிதியின் பேரன்களின் நிறுவனத்திலே கருணாநிதியின் சொந்த மகனே கோரவன்முறையில் இறங்கியதற்கு கருணாநிதி சொல்லும் பதில் என்ன?



* தாக்குதல் நடத்தப்பட்ட போது கைகட்டி வேடிக்கைபார்த்துக்கொண்டிருந்த போலீசார்களுக்கும் நாளை இதே சம்பவம் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்?



* எத்தனையோ வண்ணக் கனவுகளுடன் வேலைக்கு சேர்ந்த ஊழியர்களின் கனவுகள் அவர்களோடு சேர்ந்து மண்ணோடு மண்ணாகியதற்கு யார் பதில் கூறுவர்?



* அன்று ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது கோவை வேளாண்மைக்கல்லூரி மாணவிகள் மூவரை அதிமுகவினர் எரித்தனர். இன்று மூன்று ஊழியர்களை திமுகவினர் எரித்துள்ளனர். இவர்களின் அராஜகர அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார்?



* அராஜகமும் வெட்டும் குத்தும்தான் அரசியல் என்றால் ஜனநாயகம் என்பதற்கு பொருள் என்ன?



இக்கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னாலும் மூவரும் உயிரோடு வரப்போவதில்லை. ஆனால் இருக்கின்ற உயிர்கள் காப்பாற்றபடலாமே ?



எது எப்படியாயினும் இறந்த எங்கள் தோழனுக்கு எங்களின் கண்ணீரை காணிக்கையாக்கி அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்.

Thursday, January 21, 2010

சிக்கலில் ஐபி4 முகவரி .......

பெருகிவரும் இணைய பயன்பாட்டில் 10% குறைவான முகவரியே கையிருப்பு.

முதலில் ஐபி4 பற்றி தெரியாதவர்களுக்கு : பிணையத்திலும், இணையத்திலும் பயன்படுத்தும் கணினிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள ஒவ்வொரு கணினிக்கும் முகவரியாக ஒரு எண்ணைஐ கொடுப்பார்கள். அந்த எண்ணின் வடிவம்தான் ஐபி4.

உலகளாவிய அளவில் இணையம் இயங்குவதற்கு முக்கிய காரணமே இந்த ஐபி முகவரிகளாகிய எண்கள்தான். அப்படியா என்று கேட்பதற்கு முன்னர் ஒரு சிறு விளக்கம் . நம்மில் இணையம் பயன்படுத்தும் அனைவருக்கும் டிஎன்எஸ் என்பது பற்றி தெரியும்.

Domain Name System என்பது கணினிகள், சேவைகள், அல்லது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமிப்பில் இணைப்புற்றிருக்கும் எந்த வள ஆதாரங்களுக்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். இணையத்திலோ அல்லது பிணையத்திலோ பங்கேற்கும் உறுப்புக்கள்(கணினி, அச்சு பொறி, மொபைல், பிடிஏ) என ஒவ்வொன்றுக்கும் ஒரு ஐபி முகவரி ஒதுக்கப்படும்.


குறிப்பாக நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் களப் பெயர்களை, இவை இணைய உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்களாக இது மொழிபெயர்க்கிறது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி. எ.கா www.tamilvanigam.com என்பது 174.37.210.240 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது.

இதில் 174.37.210.240 என்கிற இந்த எண் ஐபி4 முறைப்படி அமைந்திருக்கிறது.
ஆம் இதில் உள்ள அனைத்து முகவரிகளுக்கும் 32 பிட் அல்லது 4பைட் அளவில் அமைந்திருக்கும்.
இப்படி 0.0.0.0 முதல் 255.255.255.255 வரை முகவரிகளை நாம் வழங்கலாம். இப்படி ஒவ்வொரு கணினிக்கும், அச்சுப்பொறிகளுக்கும், அலைபேசிகளுக்கும் வழங்கினாலும் மொத்தமாக 4,294,967,296,( நானுற்றி 29 கோடியே49 லட்சத்து அறுபத்திஎழு ஆயிரத்து இருநூற்றி தொண்ணுத்தாறு) முகவரிகள்தான் வழங்கமுடியும்.
தற்போது இணையம் சார்ந்த பணிகள் அதிகரித்துவருவதால் ஒவ்வொரு எலக்ட்ரானிக் பொருளுக்கும் ஐபி முகவரி என்பது இன்றியைமயாததாகிறது. தற்போது பெரிய பெரிய அலுவலகங்களில் நிறுவனங்களை மேலாண்மையிட ஐபி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றனது. இப்படி ஒவ்வொரு கேமராக்களிலும் ஐபி முகவரிகள் வழியாக இயங்குவதால் ஐபி முகவரிகள் விரைவாக செலவாகிவிட்டது.
அதிலும் குறிப்பாக இன்னொன்று...

தற்போது அகண்ட அலைவரிசை எனப்படும்ப்ராட்பேண்ட் வழியாக இணையத்தை தொடர்புகொள்வோர்கள் மிக அதிகம். அதனாலும் ஐபி முகவரிகள் குறைந்துவருகின்றன. ப்ராட்பேண்ட் இணையத்தை பயன்படுத்துபவதால் எப்படி ஐபிமுகவரிகள் குறையும் என்று கேட்கலாம்.
ஒவ்வொரு முறையும் கணினி இணையத்தை தொடர்புகொண்டவுடன் அவர்களுக்கான இணைய வழங்கியானது தானாகவே ஒரு ஐபி முகவரியை வழங்கும். இப்போது அகண்ட அலைவரிசையானது குறைந்தவிலையில் கிடைப்பதால் யாரும் இணையத்தை விட்டு அகலுவதேஇல்லை .இதனால் ஒரே கணினி ஒரே முகவரியை பெற்றுவிடுகிறது.
மேலும் வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு இணைய இணையப்பிற்கும் ஒரு நிலையான ஐபி முகவரி வழங்கிவிடுகிறார்கள். இப்படி பல்வேறு காரணங்களால் இதுவரை வந்த ஐபி4 இன்னமும் 10% குறைவான அளவுதான் இருக்கிறது.

தீர்வு.

1996ம் ஆண்டிலேயே ஆண்டிலிருந்து ஐபி 6 முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின் இதற்கு முன்னமே கணினி ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டறிந்து நான்காம் தலைமுறைக்கான புதிய ஐபி முகவரிகளை வடிவமைத்துவருகின்றன.
அதுதுான் ஐபி6 முகவரி. இந்த முகவரி 128 பிட் அளவில் வரும் என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கலாம். அதோடு ஐபி செக்யூர் எனப்படும் பாதுகாப்பு முறைகளும் மேம்படுத்தப்படும்
தற்போது கூகிள் நிறுவனமும், இந்தியாவில் ஃசிபி நிறுவனமும் ஐபி6 முறைக்கு மாறிவருகின்றன என்பது குறிப்பிட்டத்தக்கது.
எனவே இந்த வருடம் தொட்டே அனைத்து நிறுவனங்களும் ஐபி6 முறைக்கு மாறும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கொசுறு : ஐபி4 முறை செப்டம்பர் , 1981ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐபி6 1990ம் ஆண்டில் வெளியிட்டபட்டு வந்தாலும் இன்னமும் இவற்றை முழுமையாக பயன்படுத்தவில்லை.

*. கூகிள் நிறுவனம் 2009ம் ஆண்டு இறுதி வரை தன்னுடைய மொத்த நெட்வொர்க்கில் 28% சதவிதத்தை மட்டுமே ஐபி6 நெட்வொர்க்கிற்கு மாற்றியிருக்கிறது

* 2011 ம் ஆண்டில் ஐபி4 முகவரிகள் முழுவதும் தீர்ந்து ஐபி6 முகவரிகளுக்கு மாற்றும் என்று கணித்துள்ளனர்.