Tuesday, December 13, 2011

இந்திய நாட்டில் நடந்துவரும் முக்கிய பிரச்னைக்கு காரணம். இலவசமே....

ஏனெனில் இலவசம் பெருக பெருக மத்திய மாநில அரசுகளுக்கு பற்றாக்குறை அதிகரிக்கிறது. நிதி பற்றாக்குறையால் விலை ஏற்றம் நடைபெறும். விலை ஏற்றத்தால் பண வீக்கம் அதிகரிக்கிறது. பணம் வீக்கம் அதிகரித்தால் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்.

இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் வௌஅிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணங்களை திரும்ப எடுக்க துவங்குவாங்கள். அப்படி தங்கள் முதலீடுகளை திரும்ப பெருவதால் இந்திய பங்குச்சந்தைகள் வீழ்கின்றன. அப்படி அவைகள் வீழ்வதால் நிறுவனங்களின் மதிப்பும், உற்பத்தியும் குறையும், செலவு குறையும். இதனால் இன்னமும் அதிகமாக கடன் பெறுவார்கள். கடன் அதிகமாக லாபம் குறைவதால் யாரும் முதலீடு செய்யமாட்டார்கள். மேலும் வாங்கி கடனிற்காக சிறிதி விலை கூட்டினாலும் அவர்களின் சந்தைமதிப்பு குறையும். சந்தை மதிப்பு குறைந்தால்் உற்பத்தி பாதிக்கப்படும். உற்பத்தி பாதித்தால் வேலை இழப்பு ஏற்படும். வேலையே இல்லாமல் பணப்பரிமாற்றம் குறைவாகும்.
மீண்டும் பணப்பரிமாற்றத்தினை அதிகரிக்க அதிகமாகன கடன் வழங்குவார்கள்.


அமெரிக்காவிற்கு எதிராக மட்டும் இந்திய ரூபாயின் மதிப்பு குறையவில்லை. உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் எதிரான பண மதிப்பு குறைந்துதான் காணப்படுகிறது. ஏனெனில் இந்திய தொழில்துறையின் வளர்ச்சி துவண்டு போய் உள்ளது. ஏனெனில் ஆட்சியாளர்கள் அந்நிய முதலீட்டை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்களே!!

Sunday, August 14, 2011

பென்னேஸ்வர மடம் அருகே பழங்கால சிற்பங்கள் நடுரோட்டில்........


பென்னேஸ்வர மடம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் இருக்கும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வழிபாட்டுத்தலம்.
இதன் அருகே தற்போது ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்காக பைப்புகளை புதைக்க குழி தோண்டி அருகே உள்ள சிலைகள் பழங்கால சிற்பங்களின் மீது போட்டு அச் சிற்பங்களையே பாழாக்கிவிட்டார்கள்.
ிதோ அதன் படங்கள் உங்கள் பார்வை

https://picasaweb.google.com/murali1309/PennesawaraMadam?authuser=0&feat=directlink

சந்திரா சார்... முக்கியமாக உங்கள் பார்வை


https://picasaweb.google.com/murali1309/PennesawaraMadam?authuser=0&feat=directlink

Thursday, February 17, 2011

கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தேவை!!

வணக்கம் நண்பர்களே!!

எங்கள் விசுவல் மீடியா இணையத்தள குழுமங்கள் மூலம்  நேரடி ஒலி மற்றும் ஒளிபரப்பு ஆகிய சேவைகளை அதிநவீன நுட்பமான , க்ளவுட் கம்ப்யூட்டிங், முறையில் தரவிருக்கிறோம்.

எனவே அதன் சோதனை ஓட்டத்திற்காக உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா விளையாடும் போட்டீகளை 
நேரடி ஒலி வழியாக வர்ணனை செய்ய விருப்பமுள்ளவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

இது உங்களுக்கும் ஒரு வாய்ப்பு. தொழில்நுட்பத்தினை மக்களிடம் கொண்டு சேர்க்க எங்களுக்கும் ஒரு வாய்ப்பு

வாருங்கள் எங்களுடன் இணையுங்கள்....சேர்ந்தே வளருவோம்....

Tuesday, January 25, 2011

நானும் வங்கி லோனும்.....

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு லோன் தருவாக சொல்ல அட நாமும் கிட்டத்தட்ட அப்படித்தானே இருக்கிறோம் என்று லோனுக்கு அப்ளை செய்தேன்.
கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு திடீரென்று ஒரு நாள் முன்னதாக அழைத்து வங்கி லோனுக்கு நேர் முகத்தேர்வு நடப்பதாக சொன்னார்கள். அட அந்நேரம் பார்த்து நான் சென்னை மாநகருக்கு சுற்றுப்பயணம்? போயிருந்தேன். அட நம்மையும் மதிச்சு கூப்பிடறாங்கன்னா நல்லவங்களாத்தான் இருப்பாங்க நம்பி சென்னையில் இருந்து அவசர அவசரமாக ஊர் வந்து சேர்ந்து உடனே கிருஷ்ணகிரி புறப்பட்டேன்.

காலையில் 11 மணிக்கு மாவட்ட தொழில் மையத்திற்கும் சென்று சேர்ந்தேன்.அங்கே போனால் வழி நெடுகிலும் கூட்டம். சரி  நம்ம ஊரில் இதெல்லாம் சகஜம்னு உள்ளே போய் எனக்கு வந்த கடிதத்தை அவர்களிடம் கொடுக்க வெளியில் காத்திருக்க சொன்னார்கள். சரி எப்படியும் சீக்கிரம் கூப்பிடுவாங்கன்னு உட்கார்ந்து உட்கார்ந்து சலிச்சு போச்சு... இதோ இப்போ வந்திரும் , இதோ இப்ப வந்திரும்னு உட்கார்ந்த என்னை சரியா கூப்பிட்டாங்க..... சாயந்திரம் 5.45 மணிக்கு.

சரி அப்படியாவது கூப்பிட்டாங்களேன்ன உள்ளேபோனா என்னப்பா தொழில் செய்யப்போறிங்கன்ன கேட்டாங்க....

நானும் க்ளவுட் கம்ப்யூட்டிங் அப்படிங்கிற நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் பல விதை மென்பொருள் உருவாக்கித்தர்றேன். வெப்சைட் எல்லாம் டிசைன் பண்ணித்தர்றேன் , விரைவில் GPs Tracking System எல்லாம் எங்கள் சர்வரைத்தான் பயன்படுத்தப்போறாங்க. அதற்குமுதலீடாக சில லட்சம் தேவைப்படுத்துன்னு சொன்னேன்.

அத கேட்ட தொழில்மைய மேலாளர் கேட்டார், க்ளவுட் கம்ப்யூட்டிங் னா என்னாப்பான்னார்... நானும் விலாவரிய விளக்கிச்சொன்னேன்.

சரிப்பா நீ  சொல்ற எந்த விசயமும் நம்ம ஊர்ல சக்சஸ் ஆகாதேன்னார். அதுக்கு நான் சொன்னன் சக்சஸ் ஆகறதும், ஆகாததும் நம்மாட்கள் பயன்படுத்தற விதத்திலும் , சந்தை படுத்தற விதத்தில் சந்தை படுத்தினா எல்லாமே சக்சஸ்தான்னு சொன்னேன்.

அத கேட்ட அவரு என்ன நினைச்சாருன்னு தெரிய,,,
இந்த தொழிலுக்கெல்லாம் லோன் தர முடியாதுன்னார். ஏன் சார்னு கேட்டா..  நீ புதுசா சந்தை படுத்தினா எப்படி சக்சஸ் பண்ண முடியும். சந்தை படுத்தறதுக்கெல்லாம் லோன் தர முடியாதுன்னுட்டார்.

நான் எப்ப சந்தை படுத்த காசு வேணும்னு  கேட்டேன் னு எனக்கு தெரியல...

உடனே பக்கத்தில் இருந்த இன்னொரு பேங்க் மேனேஜர் கொட்டேசன் காட்டுப்பான்னாரு...

நானும் சரின்னு கொடுத்தேன்.....
கொடுத்தவுடனே என்னப்பா இது டாலர்ல இருக்குன்னார். நான் சொன்னேன். சர்வர் எல்லாம் அமெரிக்காவில் தான் வாங்கணும்னு.

அவருக்கு என்ன தோணுச்சோ தெரியல தம்பி, அடுத்த மாவட்டத்தில் போய் ஆரம்பிக்கிறேன்னு சொன்னாலயே லோன் தரமாட்டோம். நீ என்னன்னா அடுத்த நாட்டில் போய் ஆரம்பிக்கிறேன்னு சொல்லறியே.... கண்டிப்பா இதுக்கெல்லாம் தர முடியாதுன்னுட்டார்..... ஏன்னா எல்லா பொருளும் அவங்க கண்ணு முன்னாடியே இருக்கணுமாம்.
அதனால அந்த சர்வர இங்கிட்டு இருந்து ரன் பண்ணுன்னார்.....
அது வேலைக்காகாதே........ நம்ம ஊர்ல அந்த அளவிற்கு நுட்பம் இன்னமும் முழுமையா வளரலைன்னு சொன்னேன்.....
யாரும் ஒத்துக்கவேயில்லை......

கடைசியா சொன்னாங்க... இன்னைக்கு லோன் கேட்க வந்தவெங்க எல்லாம் மாடு வாங்கணும், ட்ராக்டர் வாங்கணும்னுதான் சொன்னாங்க. நீ ஏதோ புதுசா சொல்ற... ஆனா வெளிநாட்டுல செய்ய வியாபாரத்துக்கெல்லாம் இங்கிட்டு லோன் தரமுடியாதுன்னு....

அப்பவே எனக்க கண்ண கட்டிபோச்சு.... ஏன்னா உள்ள போனதுல இருந்து ஒரே வார்த்தையே திரும்பி திரும்பி சொல்றங்கன்ன புரிஞ்சு போச்சு....
கடைசியா வெளியே வந்தாச்சு....

ஒரு நாள் அலுவல வேலை முடிஞ்சே போச்சு....

6ம் வகுப்பு படிச்சப்ப எங்க வாத்தியார் சொன்னாரு.... நீயெல்லாம் நண்டு புடிக்கத்தான் லாக்கின்னு.....

பேசாம அந்த தொழிலயே செய்யலாம்னு இருக்கேன்......

இதோ நண்டுபிடிக்க பயிற்சி எடுக்கும்....