Tuesday, January 25, 2011

நானும் வங்கி லோனும்.....

படித்த வேலையற்ற இளைஞர்களுக்கு லோன் தருவாக சொல்ல அட நாமும் கிட்டத்தட்ட அப்படித்தானே இருக்கிறோம் என்று லோனுக்கு அப்ளை செய்தேன்.
கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு திடீரென்று ஒரு நாள் முன்னதாக அழைத்து வங்கி லோனுக்கு நேர் முகத்தேர்வு நடப்பதாக சொன்னார்கள். அட அந்நேரம் பார்த்து நான் சென்னை மாநகருக்கு சுற்றுப்பயணம்? போயிருந்தேன். அட நம்மையும் மதிச்சு கூப்பிடறாங்கன்னா நல்லவங்களாத்தான் இருப்பாங்க நம்பி சென்னையில் இருந்து அவசர அவசரமாக ஊர் வந்து சேர்ந்து உடனே கிருஷ்ணகிரி புறப்பட்டேன்.

காலையில் 11 மணிக்கு மாவட்ட தொழில் மையத்திற்கும் சென்று சேர்ந்தேன்.அங்கே போனால் வழி நெடுகிலும் கூட்டம். சரி  நம்ம ஊரில் இதெல்லாம் சகஜம்னு உள்ளே போய் எனக்கு வந்த கடிதத்தை அவர்களிடம் கொடுக்க வெளியில் காத்திருக்க சொன்னார்கள். சரி எப்படியும் சீக்கிரம் கூப்பிடுவாங்கன்னு உட்கார்ந்து உட்கார்ந்து சலிச்சு போச்சு... இதோ இப்போ வந்திரும் , இதோ இப்ப வந்திரும்னு உட்கார்ந்த என்னை சரியா கூப்பிட்டாங்க..... சாயந்திரம் 5.45 மணிக்கு.

சரி அப்படியாவது கூப்பிட்டாங்களேன்ன உள்ளேபோனா என்னப்பா தொழில் செய்யப்போறிங்கன்ன கேட்டாங்க....

நானும் க்ளவுட் கம்ப்யூட்டிங் அப்படிங்கிற நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் பல விதை மென்பொருள் உருவாக்கித்தர்றேன். வெப்சைட் எல்லாம் டிசைன் பண்ணித்தர்றேன் , விரைவில் GPs Tracking System எல்லாம் எங்கள் சர்வரைத்தான் பயன்படுத்தப்போறாங்க. அதற்குமுதலீடாக சில லட்சம் தேவைப்படுத்துன்னு சொன்னேன்.

அத கேட்ட தொழில்மைய மேலாளர் கேட்டார், க்ளவுட் கம்ப்யூட்டிங் னா என்னாப்பான்னார்... நானும் விலாவரிய விளக்கிச்சொன்னேன்.

சரிப்பா நீ  சொல்ற எந்த விசயமும் நம்ம ஊர்ல சக்சஸ் ஆகாதேன்னார். அதுக்கு நான் சொன்னன் சக்சஸ் ஆகறதும், ஆகாததும் நம்மாட்கள் பயன்படுத்தற விதத்திலும் , சந்தை படுத்தற விதத்தில் சந்தை படுத்தினா எல்லாமே சக்சஸ்தான்னு சொன்னேன்.

அத கேட்ட அவரு என்ன நினைச்சாருன்னு தெரிய,,,
இந்த தொழிலுக்கெல்லாம் லோன் தர முடியாதுன்னார். ஏன் சார்னு கேட்டா..  நீ புதுசா சந்தை படுத்தினா எப்படி சக்சஸ் பண்ண முடியும். சந்தை படுத்தறதுக்கெல்லாம் லோன் தர முடியாதுன்னுட்டார்.

நான் எப்ப சந்தை படுத்த காசு வேணும்னு  கேட்டேன் னு எனக்கு தெரியல...

உடனே பக்கத்தில் இருந்த இன்னொரு பேங்க் மேனேஜர் கொட்டேசன் காட்டுப்பான்னாரு...

நானும் சரின்னு கொடுத்தேன்.....
கொடுத்தவுடனே என்னப்பா இது டாலர்ல இருக்குன்னார். நான் சொன்னேன். சர்வர் எல்லாம் அமெரிக்காவில் தான் வாங்கணும்னு.

அவருக்கு என்ன தோணுச்சோ தெரியல தம்பி, அடுத்த மாவட்டத்தில் போய் ஆரம்பிக்கிறேன்னு சொன்னாலயே லோன் தரமாட்டோம். நீ என்னன்னா அடுத்த நாட்டில் போய் ஆரம்பிக்கிறேன்னு சொல்லறியே.... கண்டிப்பா இதுக்கெல்லாம் தர முடியாதுன்னுட்டார்..... ஏன்னா எல்லா பொருளும் அவங்க கண்ணு முன்னாடியே இருக்கணுமாம்.
அதனால அந்த சர்வர இங்கிட்டு இருந்து ரன் பண்ணுன்னார்.....
அது வேலைக்காகாதே........ நம்ம ஊர்ல அந்த அளவிற்கு நுட்பம் இன்னமும் முழுமையா வளரலைன்னு சொன்னேன்.....
யாரும் ஒத்துக்கவேயில்லை......

கடைசியா சொன்னாங்க... இன்னைக்கு லோன் கேட்க வந்தவெங்க எல்லாம் மாடு வாங்கணும், ட்ராக்டர் வாங்கணும்னுதான் சொன்னாங்க. நீ ஏதோ புதுசா சொல்ற... ஆனா வெளிநாட்டுல செய்ய வியாபாரத்துக்கெல்லாம் இங்கிட்டு லோன் தரமுடியாதுன்னு....

அப்பவே எனக்க கண்ண கட்டிபோச்சு.... ஏன்னா உள்ள போனதுல இருந்து ஒரே வார்த்தையே திரும்பி திரும்பி சொல்றங்கன்ன புரிஞ்சு போச்சு....
கடைசியா வெளியே வந்தாச்சு....

ஒரு நாள் அலுவல வேலை முடிஞ்சே போச்சு....

6ம் வகுப்பு படிச்சப்ப எங்க வாத்தியார் சொன்னாரு.... நீயெல்லாம் நண்டு புடிக்கத்தான் லாக்கின்னு.....

பேசாம அந்த தொழிலயே செய்யலாம்னு இருக்கேன்......

இதோ நண்டுபிடிக்க பயிற்சி எடுக்கும்....



2 comments:

koodu said...

ஹ ஹ ஹா.. நண்டு புடிக்க எதா வங்கி லோன் தருதான்னு கேட்டு சொல்லவா ??

Anonymous said...

Sari nandu pudichaya illiya....